தமிழக சுகாதாரத்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் 48,418 பேருக்கு பணி நியமனம் வழங்கி சாதனை

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கடந்த 5 ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி மற்றும் தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று 1,071 உதவி மருத்துவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கிப் பேசிய அவர், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் மட்டும் 13,093 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 17,708 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த அதிரடி நியமனங்கள் மூலம் அரசு சுகாதாரத்துறையில் மருத்துவர் காலிப்பணியிடங்களே இல்லாத நிலை உருவாகியுள்ளதாக அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். மேலும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 100 குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கான உயர்தர சிகிச்சை உறுதி செய்யப்பட்டுள்ளது.