டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த சஞ்சு சாம்சன் என்னும் அசாத்தியமான கேம் சேஞ்சர்

இந்திய அணி மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பையை உச்சிமுகர சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டமே முக்கிய காரணமாக அமைந்தது. தொடரின் ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமரவைக்கப்பட்டாலும், களமிறங்கிய பிறகு தனது அசாத்திய திறமையால் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 97 ரன்களும், அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 89 ரன்களும் குவித்து இந்தியாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற பெருமை சஞ்சுவையே சேரும்.
இறுதிப்போட்டியில் மீண்டும் ஒருமுறை 89 ரன்கள் விளாசி இந்தியாவை 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்ட வைத்தார் இந்த மாஸ்டர்மைண்ட். பல ஆண்டுகளாக இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்காமல் தவித்து வந்த சஞ்சு, தற்போது தனது அபாரமான பேட்டிங் மூலம் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ரோஹித் சர்மாவைப் போன்ற நேர்த்தியான டைமிங் மற்றும் சிக்ஸர்களை பறக்கவிடும் திறமை கொண்ட அவர், இந்திய கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து உலகக்கோப்பை கனவை நனவாக்கியுள்ளார்.