சமூக ஊடகங்களில் மற்ற பெண்களின் புகைப்படங்களுக்கு லைக் செய்தால் விவாகரத்து உறுதி நீதிமன்றம் அதிரடி

சமூக ஊடகங்களில் மற்ற பெண்களின் புகைப்படங்களுக்கு லைக் செய்தால் விவாகரத்து உறுதி நீதிமன்றம் அதிரடி

சமூக ஊடகங்களில் மற்ற பெண்களின் பதிவுகளுக்குத் தொடர்ந்து ‘லைக்’ செய்வது திருமண உறவில் துரோகமாகக் கருதப்படும் என்று துருக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கணவரின் இத்தகைய செயல் மனைவியை அவமதிப்பதாகவும் திருமணத்தின் மீதான சட்டபூர்வமான விசுவாசத்தை மீறுவதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. டிஜிட்டல் உலகில் தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் விரிசல்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு முக்கிய உதாரணமாக மாறியுள்ளது.

தனது கணவர் சமூக வலைதளங்களில் மற்ற பெண்களின் புகைப்படங்களுக்கு விருப்பம் தெரிவிப்பதோடு சர்ச்சைக்குரிய கருத்துகளையும் பதிவிடுவதாக மனைவி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கணவர் தரப்பு வாதங்களை நிராகரித்து மனைவிக்கு இழப்பீடு மற்றும் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு சமூக வலைதள பயன்பாடு மற்றும் குடும்ப உறவுகளுக்கு இடையிலான எல்லைகளை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *