சஞ்சு சாம்சனின் உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வருகிறதா இர்பான் பதான் கொடுத்த முக்கிய விளக்கம்

சஞ்சு சாம்சனின் உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வருகிறதா இர்பான் பதான் கொடுத்த முக்கிய விளக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் சஞ்சு சாம்சன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது உலகக்கோப்பை அணியில் அவரது இடம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த நான்கு போட்டிகளில் வெறும் 40 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் திருவனந்தபுரம் போட்டி அவருக்கு ஒரு வாழ்வா சாவா போராட்டமாக அமைந்தது. மறுபுறம் இஷான் கிஷன் அதிரடி சதம் விளாசி தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.

இருப்பினும் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக முன்னாள் வீரர் இர்பான் பதான் குரல் கொடுத்துள்ளார். சஞ்சுவை சரியான பேட்டிங் வரிசையில் களம் இறக்குவதும் அவருக்கு போதுமான கால அவகாசம் வழங்குவதும் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார். திறமையான வீரரான சஞ்சுவுக்கு உரிய வாய்ப்புகள் கிடைத்தால் அவர் நிச்சயம் மீண்டு வருவார் என பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *