காலாவதியான ஓட்டுநர் உரிமம் செல்லுபடியாகும் மத்திய அரசின் அதிரடி சலுகை

ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தலில் வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் முக்கிய திருத்தங்களைப் பரிந்துரைத்துள்ளது. இதன்படி உரிமம் காலாவதியான பிறகு கூடுதலாக முப்பது நாட்கள் சலுகைக் காலம் வழங்கப்பட உள்ளது. மத்திய இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா மக்களவையில் அறிமுகப்படுத்திய ஜன் விஸ்வாஸ் மசோதாவின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் பழைய உரிமம் தொடர்ந்து செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநிலம் முழுவதும் வாகனப் பதிவை அனுமதிப்பது மற்றும் விண்ணப்பித்த தேதியிலிருந்தே உரிமத்தைப் புதுப்பிப்பது போன்ற இருபது சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் நிர்வாக நடைமுறைகளை எளிதாக்குவதோடு பொதுமக்களின் சிரமங்களைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த நெகிழ்வுத்தன்மை வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.