ஓய்வு குறித்து நெய்মার கொடுத்த சிக்னல்: 2026 உலகக்கோப்பை தான் கடைசி வாய்ப்பா?

ஓய்வு குறித்து நெய்মার கொடுத்த சிக்னல்: 2026 உலகக்கோப்பை தான் கடைசி வாய்ப்பா?

மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவிற்குப் பிறகு கால்பந்து உலகின் மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்தவர் நெய்மார். இருப்பினும், அடிக்கடி ஏற்படும் காயங்கள் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறையினால் சமீபகாலமாக அவரது ஆட்டம் மங்கத் தொடங்கியது.

தற்போது முழங்கால் காயத்திலிருந்து மீண்டு வர தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நெய்மார், தனது பழைய கிளப்பான சாண்டோஸில் பயிற்சியைத் தொடங்கியுள்ளார். 2026 உலகக்கோப்பைக்கான பிரேசில் அணியில் இடம் கிடைக்காவிட்டால், சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறப்போவதாக அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஃபிஃபா (FIFA) நட்பு ரீதியிலான போட்டிகளில் நெய்மார் பங்கேற்க வேண்டுமெனில், அவர் ‘100 சதவீத உடற்தகுதியுடன்’ இருக்க வேண்டும் என்று பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி நிபந்தனை விதித்துள்ளார். தனது கால்பந்து வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்ள நெய்மாருக்குக் கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு இதுவே என்று கருதப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *