ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்துப் படைகளையும் பயங்கரவாதிகளாக அறிவித்தது ஈரான்
February 1, 2026

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் அனைத்து ராணுவங்களையும் பயங்கரவாத அமைப்புகளாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத அமைப்பாக அறிவித்ததற்குப் பதிலடியாக தெஹ்ரான் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. தனது நாட்டின் சட்டதிட்டங்களின்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பக்கர் கலிபாப் ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, இரு தரப்பிற்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.