உலகின் சுத்தமான இந்து கிராமம் எங்குள்ளது தெரியுமா? 700 ஆண்டுகளாக குற்றமே நடக்காத ஆச்சரியம்

உலகின் சுத்தமான இந்து கிராமம் என்றால், பலரும் இந்தியாவைத் தான் நினைப்பார்கள். ஆனால், இந்தோனேசியாவின் பாலி மாகாணத்தில் உள்ள பெங்லிபுரான் (Penglipuran) கிராமம் அந்த எண்ணத்தை மாற்றியுள்ளது. பசுமையான மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த சிறிய கிராமம், உலகளாவிய ஆய்வுகளில் உலகின் மூன்று சுத்தமான கிராமங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 700 ஆண்டுகளாக இங்கு எந்தவொரு குற்றமும் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை என கிராமவாசிகள் பெருமையுடன் கூறுகின்றனர்.
இந்த மரியாதை அரசாங்கத்தின் சட்டங்களால் வரவில்லை, மாறாக பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களால் வந்தது. பாரம்பரிய மூங்கில் வீடுகள் மற்றும் குப்பை போடுவது, மது அருந்துவது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் இங்குள்ள தூய்மைக்கு முக்கியக் காரணமாகும். வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், கிராமத்தின் சாலைகள் அமைதியாகவும் மாசு இல்லாமலும் உள்ளன. சமூகப் பொறுப்பும் ஒழுக்கமும் பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்க முடியும் என்பதற்கு பெங்லிபுரான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.