ஈரான் மீதான தாக்குதலை 10 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரானின் மின் உற்பத்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான ராணுவத் தாக்குதலை மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் அரசின் வேண்டுகோளை ஏற்று, ஏப்ரல் 6-ஆம் தேதி இரவு 8 மணி வரை இந்த நடவடிக்கை தள்ளிவைக்கப்படுவதாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 23 அன்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டம் ஒருதலைப்பட்சமானது என்று கூறி ஈரான் அதனை ஏற்க மறுத்துவிட்டது. போலி செய்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ள டிரம்ப், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.