ஈரானில் போராட்டக்காரர்கள் மீது ஒடுக்குமுறை காட்டிய 19 அதிகாரிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி தடை
March 11, 2026

ஈரானில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற போராட்டங்களின் போது பொதுமக்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்ட 19 அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் மீது புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒடுக்குமுறையின் மூலம் ஒரு நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க முடியாது என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அதிகாரி காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் பதற்றத்திற்கு மத்தியில், ஈரானிய அதிகாரிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் இந்தத் தடையை உறுதி செய்துள்ளன.