இனி வீட்டிலிருந்தே 50000 ரூபாய் மற்றும் தங்கம் பெறலாம் தமிழக அரசின் அதிரடி ஆன்லைன் அறிவிப்பு

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திருமண நிதியுதவி திட்டங்களுக்கு இனி இணையதளம் வாயிலாகவே விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. டாக்டர் தர்மாம்பாள் மற்றும் ஈ.வெ.ரா. மணியம்மையார் உள்ளிட்ட நினைவுத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்கத்தைப் பெற பொதுமக்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. விண்ணப்பங்களின் நிலையை ஆன்லைனிலேயே உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையில் ஆவணங்கள் சரியாக இருந்தால் நேரடி கள ஆய்வு தவிர்க்கப்பட்டு, விரைவாக நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்த காரணங்கள் விண்ணப்பதாரருக்கு தெளிவுபடுத்தப்படும். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதோடு, தகுதியுள்ள பயனாளிகளுக்குக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அரசின் சலுகைகள் சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.