இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா கட்டுப்படுத்துகிறதா

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா கட்டுப்படுத்துகிறதா

உலக சந்தையில் நிலவும் எண்ணெய் தட்டுப்பாட்டை சமாளிக்க, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவிற்கு அமெரிக்கா 30 நாட்கள் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த அறிவிப்பு இந்தியாவின் எரிசக்தி கொள்கை குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. அமெரிக்க அழுத்தத்தால் ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இந்தியா குறைத்து வரும் நிலையில், இந்த அனுமதி அமெரிக்காவின் மேலாதிக்கத்தை காட்டுவதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தியாவின் இறக்குமதி முடிவுகள் தற்போது வாஷிங்டனின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *