இந்திய பாகிஸ்தான் போட்டியை சுற்றியுள்ள மர்மம் விலகுமா
February 9, 2026

டி20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்து நிலவும் இழுபறி இன்னும் முடிவுக்கு வரவில்லை. லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா, பிசிபி தலைவர் மோசின் நக்வி மற்றும் பிசிபி பிரதானி அமினுல் இஸ்லாம் ஆகியோருக்கு இடையே சுமார் ஐந்து மணி நேர நீண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
எதிர்வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெற வேண்டிய இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் அரசுடன் ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என பிசிபி தெரிவித்துள்ளது. இந்த மெகா போட்டியை நடத்துவது குறித்து உலக கிரிக்கெட் அமைப்புகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.