ஆணையத்தின் மென்பொருள் மிகக் கடுமையானது என்று உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
February 9, 2026

தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் எதார்த்த நிலைக்கு மாறாக மிகவும் கடுமையான முறையில் செயல்படுவதாக உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெயமால்யா பாக்சி அதிருப்தி தெரிவித்துள்ளார். 50 ஆண்டு கால இடைவெளி என்பது தாத்தா-பேரன் உறவைக் குறிப்பதாக ஆணையம் கூறினாலும், 20 வயதிலேயே திருமணம் நடக்கும் சமூகச் சூழலை மென்பொருள் கணக்கில் கொள்ளவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஐந்து அல்லது ஆறு குழந்தைகளைக் கொண்ட நபர்களுக்கும் தேவையற்ற முறையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நடைமுறை எதார்த்தங்களுடன் ஒத்துப்போகாத இந்தத் தானியங்கி மென்பொருள் செயல்பாடுகள் பொதுமக்களுக்கு வீண் சிரமத்தை ஏற்படுத்துவதாக நீதிபதி தனது கவலையை வெளிப்படுத்தினார்.