அண்டார்டிகாவில் பனி உருகியும் கடல் மட்டம் குறைவது ஏன் இயற்கையின் மர்மமான மூன்று சக்திகள் குறித்து அதிர்ச்சி தகவல்

அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகினாலும், அங்குள்ள கடல் மட்டம் உயர்வதற்குப் பதிலாகக் குறைந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பனி அடுக்குகள் உருகுவதால் அவற்றின் ஈர்ப்பு விசை குறைந்து, அங்கிருக்கும் நீர் உலகின் பிற கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்வதே இதற்குப் பின்னால் உள்ள ரகசியம் என புதிய ஆய்வுகள் கூறுகின்றன. ஈர்ப்பு விசை மாற்றம், பூமியின் சுழற்சி அச்சில் ஏற்படும் விலகல் மற்றும் கடல் நீர் மறுபகிர்வு ஆகிய மூன்று முக்கிய சக்திகளே இந்த விசித்திரமான மாற்றத்திற்கு காரணமாக அமைகின்றன.
விஞ்ஞானிகளின் கணிப்புப்படி, 2100 ஆம் ஆண்டிற்குள் அண்டார்டிகா பனி உருகுவதால் மட்டும் உலக கடல் மட்டம் 10 செ.மீ உயரும், இது 2200 ஆம் ஆண்டில் 1 மீட்டர் வரை செல்லக்கூடும். இதனால் இந்தியா, வங்கதேசம் மற்றும் பசிபிக் தீவுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. இப்போதே நச்சுப்புகை வெளியேற்றத்தைக் குறைக்கவில்லை எனில், கிழக்கு அண்டார்டிகாவும் உருகத் தொடங்கி கோடிக்கணக்கான மக்கள் இடம்பெயர நேரிடும். இது உலகின் எதிர்காலத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான எச்சரிக்கையாகும்.