சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க ஐந்து லட்சம் இண்டக்ஷன் அடுப்புகளை வழங்க அரசு அதிரடி முடிவு
March 28, 2026

நாடு முழுவதும் நிலவும் எல்பிஜி விநியோக நிச்சயமற்ற தன்மையால் மின்சார சமையல் முறையை ஊக்குவிக்க ஐந்து லட்சம் இண்டக்ஷன் அடுப்புகளை கொள்முதல் செய்ய ஈஇஎஸ்எல் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சியால் சமையல் செலவு சுமார் 30 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தை போக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நாட்டில் போதிய எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், ஊரடங்கு குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.