ஈரானின் புதிய உச்ச தலைவர் கொல்லப்பட்டாரா டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அதிரடித் தகவல்

ஈரானின் புதிய உச்ச தலைவர் கொல்லப்பட்டாரா டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அதிரடித் தகவல்

ஈரானின் புதிய உச்ச தலைவரான மோஜ்தபா கமேனி அமெரிக்க இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மியாமியில் நடைபெற்ற மாநாட்டில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் துல்லியமான தாக்குதல்கள் ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளையும் மூத்த தலைவர்களையும் முழுமையாக அழித்துவிட்டதாகவும் அவர் கூறினார். இதனால் ஈரான் தற்போது தலைமைத்துவமற்ற நிலையில் உள்ளதாக ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு மோஜ்தபா பொறுப்பேற்றார் ஆனால் அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. ஈரானின் விமானப்படை மற்றும் ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் முற்றிலும் முடக்கப்பட்டதாக ட்ரம்ப் கூறினார். இந்த தகவல் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த ஈரானின் அதிகாரப்பூர்வ விளக்கம் இன்னும் வெளியாகவில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *