திமுக அரசின் அடக்குமுறைக்கு எதிராக சீறிய தவெக தலைவர் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை எம்கேபி நகரில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு காவல்துறை அதிரடியாக அனுமதி மறுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவால் அக்கட்சியினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே நுங்கம்பாக்கத்தில் நடைபெறவிருந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்ட நிலையில், இது தொடர்ச்சியான முட்டுக்கட்டையாகப் பார்க்கப்படுகிறது.
இந்த தடையை ஜனநாயகப் படுகொலை என வர்ணித்துள்ள விஜய், திமுக அரசின் பாசிசச் செயல்களை வன்மையாகக் கண்டித்துள்ளார். திட்டமிட்ட சதி மூலம் தனது குரலை நசுக்கப் பார்ப்பதாகவும், ஆளுங்கட்சியின் இத்தகைய அச்சுறுத்தல்கள் தவெகவின் வளர்ச்சியைக் கண்டு அவர்கள் அஞ்சுவதையே காட்டுகிறது என்றும் அவர் சாடியுள்ளார். அதிகார பலத்தைப் பயன்படுத்தி தவெகவின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என அவர் எச்சரித்துள்ளார்.