சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தமிழகத்தின் முதல் பிஆர்டிஎஸ் திட்டம்

சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தமிழகத்தின் முதல் பிஆர்டிஎஸ் திட்டம்

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பிராட்வே முதல் பூந்தமல்லி வரை 23 கி.மீ தொலைவிற்குத் தமிழகத்தின் முதல் பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பு (BRTS) பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காகச் சாலை விரிவாக்கம் மற்றும் நில அளவீட்டுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 3,300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகும் இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கான பயண நேரம் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் ஜிஎஸ்டி சாலையில் ஊரப்பாக்கம் முதல் செட்டிப்புண்ணியம் வரை 18.4 கி.மீ தொலைவிற்குப் புதிய உயர்மட்ட விரைவுச்சாலை அமையவுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தப் பாதையில் ஒவ்வொரு 2 கிலோமீட்டருக்கும் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படும். மின்கம்பிகளை அகற்றும் பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த ஒருங்கிணைந்த கட்டமைப்பு சென்னையின் மிக முக்கியமான வழித்தடங்களில் ஏற்படும் நெரிசலை நிரந்தரமாகச் சீரமைக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *