அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் போடும் புதிய திட்டம் பலிக்குமா

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் ஒரு முக்கிய மத்தியஸ்தராக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளின் உயர் மட்ட பிரதிநிதிகள் சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்த நகர்வு சர்வதேச அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் ட்ரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். மத்திய கிழக்கில் அமைதி நிலவ இந்தியா தனது ஆதரவை வழங்கியுள்ளது. சவுதி அரேபியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளும் இந்த அமைதி முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தானின் இந்த திடீர் ராஜதந்திர நடவடிக்கை சர்வதேச அளவில் உற்று நோக்கப்படுகிறது.