இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டிற்கு ரகசியங்களை கசியவிட்ட நபருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியது

இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டிற்கு ரகசியங்களை கசியவிட்ட நபருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியது

ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்த ரகசிய தகவல்களை இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டிற்கு வழங்கிய குற்றத்திற்காக கௌரூஷ் கெய்வானி என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவிய மோதல் சூழலில் இவர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு நீதித்துறை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட கெய்வானி, ஆறு ஐரோப்பிய நாடுகள் மற்றும் டெல் அவிவ் நகரில் மொசாட் அதிகாரிகளிடம் சிறப்பு பயிற்சி பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அணுசக்தி மையங்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இவர் முக்கிய தகவல்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உளவு நடவடிக்கைகளை தடுக்க ஈரான் தனது கண்காணிப்பை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *