ஈரான் விவகாரத்தில் டிரம்பின் அழைப்பை ஏற்று போர்க்களத்தில் இறங்கும் பிரிட்டன்
March 16, 2026

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் வைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்ற அமெரிக்காவிற்கு உதவ பிரிட்டன் முன்வந்துள்ளது. அதிபர் டிரம்பின் கோரிக்கையை ஏற்று, அந்த கடல் பாதையை மீட்டெடுக்க கண்ணிவெடிகளை அழிக்கும் நவீன ரோபோக்களை அனுப்ப பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் முடிவு செய்துள்ளார்.
உதவ மறுக்கும் நாடுகளுக்கு நேட்டோ அமைப்பில் பாதிப்பு ஏற்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இதற்கிடையில், லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் துபாயில் நடந்த ட்ரோன் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. எரிசக்தி தட்டுப்பாடு குறித்த அச்சமும் அதிகரித்துள்ளதால், சீன அதிபருடனான டிரம்பின் சந்திப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளது.