ஈரானின் 304 ஏவுகணைகளை வானிலேயே சிதறடித்த ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு படை
March 16, 2026

ஈரான் ஏவிய 304 ஏவுகணைகள் மற்றும் 1,627 ட்ரோன்களை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக அழித்துள்ளது. இந்தத் தாக்குதலில் இதுவரை 2 வீரர்கள் மற்றும் 5 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், காயமடைந்த 145 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அமீரகம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்புப் படையினர் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லைப் பகுதிகளில் தற்போது உச்சக்கட்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.