பங்களாதேஷிடம் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான் மொஹ்சின் நக்வியை வறுத்தெடுத்த கம்ரான் அக்மல்

பங்களாதேஷிடம் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான் மொஹ்சின் நக்வியை வறுத்தெடுத்த கம்ரான் அக்மல்

பங்களாதேஷிற்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் இழந்ததைத் தொடர்ந்து, பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி மீது முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கடும் தாக்குதலை நடத்தியுள்ளார். மைதானத்தில் மற்ற அணிகளை வீழ்த்த முடியாவிட்டால், அடுத்து ஐசிசி கோப்பையையும் திருடி வருவீர்களா என்று நக்வியை அவர் நேரடியாகக் கிண்டல் செய்துள்ளார். சமீபத்திய கோப்பை சர்ச்சைகளை முன்வைத்து இந்த காட்டமான விமர்சனம் எழுந்துள்ளது.

தற்போதைய பாகிஸ்தான் அணி மீது தமக்கு துளியும் நம்பிக்கையில்லை என்று அக்மல் ஆதங்கப்பட்டுள்ளார். நெதர்லாந்து போன்ற அணிகள் கூட இப்போது பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முதல் போட்டியில் 114 ரன்களுக்கு சுருண்டதும், கடைசி போட்டியில் 11 ரன்களில் தோற்று தொடரை பறிகொடுத்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இளம் வீரர்களின் போராட்டத்தை பாராட்டிய கேப்டன் ஷாஹீன் அப்ரிடி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *