மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளை கோடாரியால் துண்டு துண்டாக வெட்டிய கணவன் கைது
March 16, 2026

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் முகமது யாசீன் என்ற நபர் தனது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளை கோடாரியால் வெட்டி படுகொலை செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் மீது இந்த கொடூர தாக்குதலை நடத்திய பிறகு அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
விசாரணையில் அந்த குழந்தைகள் தனக்கு பிறக்கவில்லை என்ற சந்தேகமே இந்த விபரீத முடிவுக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் பெண்கள் இது போன்ற ஆணவக் கொலைகளுக்கு பலியாவது மனித உரிமை அமைப்புகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.