தேர்தல் அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள் 4 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடி மாற்றம்
March 16, 2026

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கரூர், ஈரோடு, நாகை மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய எஸ்பிக்களாக ஹரிகிரண் பிரசாத், கிரண் ஸ்ருதி, சுஜித் குமார் மற்றும் ஸ்ரீநாதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலை நடுநிலையுடன் நடத்தவும், பறக்கும் படைகளின் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் இந்த அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.