13 ஆண்டு கால போராட்டத்திற்குப் பின் கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரிஷ் ரானா
March 16, 2026

காசியாபாத்தைச் சேர்ந்த ஹரிஷ் ரானா, 2013-ல் ஏற்பட்ட விபத்தால் 13 ஆண்டுகளாகக் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் உயிர் வாழ்ந்த அவருக்கு, உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவின்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை நிறுத்தப்பட்டது.
மகனின் தீராத வலியைக் கண்டு பெற்றோர் தாக்கல் செய்த மனுவை ஏற்று இந்த அனுமதி வழங்கப்பட்டது. பிரம்மகுமாரி அமைப்பின் சட்ட உதவியுடன் நடந்த இந்தப் போராட்டத்தின் இறுதியில், ஹரிஷ் ரானாவின் உயிர் காக்கும் கருவிகள் அகற்றப்பட்டன. தாயின் கண்ணீர் மல்கிய বিদாயக் காட்சிகள் இணையதளவாசிகளை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.