மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு
March 15, 2026

தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பின்படி, மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். முதற்கட்ட வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30 அன்றும், இரண்டாம் கட்டத் தாக்கல் ஏப்ரல் 2 அன்றும் தொடங்குகின்றன. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும்.
அதேவேளையில் அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 9 அன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 16 முதல் தொடங்குகிறது. தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் மே 6-க்குள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.