காங்கிரஸ் தொகுதிகள் குறித்து வீண் விவாதம் செய்ய வேண்டாம் என செல்வப்பெருந்தகை அதிரடி

காங்கிரஸ் தொகுதிகள் குறித்து வீண் விவாதம் செய்ய வேண்டாம் என செல்வப்பெருந்தகை அதிரடி

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்து மற்ற தோழமை கட்சிகள் சர்ச்சை எழுப்ப வேண்டாம் என செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டுள்ளார். முன்பு 110 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், தற்போது வெறும் 28 இடங்களை மட்டுமே ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த தியாகத்தில் உள்ள வேதனையை மற்ற கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவே கூடுதல் தொகுதிகளை மனநிறைவோடு பெற்றுள்ளதாக அவர் விளக்கமளித்தார். மற்ற கட்சிகள் தங்கள் உரிமைகளை முதலமைச்சரிடம் கேட்டுப் பெறலாமே தவிர, காங்கிரசுக்கு ஏன் கொடுத்தீர்கள் எனக் கேள்வி எழுப்புவது முறையல்ல என்றும் அவர் கூறினார். கூட்டணியின் ஒற்றுமையைக் காக்க அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *