ஈரான் ஒப்பந்தத்தை அதிரடியாக நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்

ஈரான் போர்நிறுத்தம் மற்றும் சமரசத்திற்கு ஆர்வம் காட்டினாலும் தற்போதைய சூழலில் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மறுத்துவிட்டார். ஈரானின் நிபந்தனைகள் போதுமான அளவு வலுவாக இல்லை என்று குறிப்பிட்ட ட்ரம்ப், அந்நாடு தனது அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக கைவிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். அரபு நாடுகளின் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை முன்மொழிவுகளையும் வாஷிங்டன் தற்போது நிராகரித்துள்ளது.
ஈரானின் கார்க் தீவு மீதான தாக்குதலில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையிலும் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இந்த மோதலில் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு சர்வதேச சந்தையில் பெரும் ஸ்திரமற்ற சூழல் உருவாகியுள்ளது.