எரிசக்தி துறையில் இந்தியா சுயசார்பு அடைய முடியுமா அனில் அகர்வால் முக்கிய தகவல்
March 13, 2026

இந்தியாவின் இயற்கை வளங்களை சரியாகப் பயன்படுத்தினால் எரிசக்தி துறையில் நாடு சுயசார்பு அடைய முடியும் என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை 10 முதல் 20 மடங்கு வரை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச அரசியல் சூழலில் பாதிப்புகளைத் தவிர்க்க நிர்வாக சிக்கல்களைக் குறைத்து வணிக சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுரங்க ஏலங்களை விரைவுபடுத்துவதும் தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.