காங்கிரஸ் கட்சி பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம்

காங்கிரஸ் கட்சி பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம்

அசாமில் நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர், காங்கிரஸ் பல தலைமுறைகளாக மக்களை மாயக் கனவுகள் மூலம் ஏமாற்றி வந்ததாகக் குற்றம் சாட்டினார். அந்த கட்சி தனது சுயநல அரசியலுக்காகச் சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தியதாகவும், ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு நில உரிமைகளைப் பறித்ததாகவும் அவர் பேசினார்.

பாஜக தலைமையிலான ஆட்சியில் மட்டுமே மாநிலத்தில் அமைதி ஏற்பட்டுள்ளதாக மோடி குறிப்பிட்டார். காங்கிரஸின் ஒவ்வொரு வாக்குறுதியிலும் கூடுதல் பொய்கள் மறைந்துள்ளதாகவும், தற்போது சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *