ஹார்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்களுக்கு அனுமதி கிடைப்பதில் நீடிக்கும் மர்மம்
March 12, 2026

இந்தியாவின் ‘புஷ்பக்’ மற்றும் ‘பரிமல்’ எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதி அளித்ததாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வளைகுடா நாடுகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய இந்த அனுமதி மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது.
இருப்பினும், இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படும் செய்திகளை ஈரான் தரப்பு தற்போது மறுத்துள்ளது. இதனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி இறக்குமதி குறித்த உண்மை நிலை என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை குழப்பம் நீடிக்கிறது.