தாய்லாந்து பூக்கட் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து
March 11, 2026

ஹைதராபாத்தில் இருந்து 133 பயணிகளுடன் தாய்லாந்தின் பூக்கட் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 மேக்ஸ் 8 விமானம், தரையிறங்கும் போது பெரும் விபத்துக்குள்ளானது. ஓடுதளத்தைத் தொட்டபோது விமானத்தின் முன் சக்கரம் உடைந்து தனியாகப் பிரிந்தது. இந்த திடீர் இயந்திரக் கோளாறால் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்கும் பீதிக்கும் உள்ளாகினர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை மற்றும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து விமான நிலைய ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.