மதுரையில் விறகு விலை ஒரே நாளில் இருமடங்கு உயர்வு மற்றும் கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

மதுரையில் விறகு விலை ஒரே நாளில் இருமடங்கு உயர்வு மற்றும் கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் மதுரையில் உள்ள உணவகங்கள் விறகு பயன்பாட்டிற்கு மாறத் தொடங்கியுள்ளன. இதனால் மாட்டுத்தாவணி விறகு சந்தையில் தேவை அதிகரித்து ஒரு டன் விறகின் விலை 10,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் 150 ரூபாய்க்கு விற்ற விறகு தற்போது 300 ரூபாயாக அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக ஒரு டன் என்ற அளவில் இருந்த தினசரி விற்பனை தற்போது 10 டன்னாக உயர்ந்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் தேவையால் இன்னும் இரண்டு நாட்களில் விறகுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என வியாபாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த விலை உயர்வு உணவக உரிமையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *