மதுரை சந்துபொந்துகளில் அதிரும் தேர்தல் பிரச்சாரம் சுவர்களைத் தொடர்ந்து ஆட்டோக்களுக்கு கடும் டிமாண்ட்

மதுரை சந்துபொந்துகளில் அதிரும் தேர்தல் பிரச்சாரம் சுவர்களைத் தொடர்ந்து ஆட்டோக்களுக்கு கடும் டிமாண்ட்

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் தொகுதிப் பங்கீட்டில் பிஸியாக இருந்தாலும், அடிமட்டத் தொண்டர்கள் சுவர் விளம்பரங்கள் மூலம் தங்கள் சின்னங்களை வரைந்து ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக மதுரை போன்ற மாநகரங்களில், குறுகிய சந்து பொந்துகளிலும் பிரச்சாரத்தைக் கொண்டு செல்ல ஆட்டோ விளம்பரங்களுக்கு அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

டிஜிட்டல் பிரச்சாரங்கள் ஒருபுறம் இருந்தாலும், பாரம்பரியமான சுவர் ஓவியங்கள் மற்றும் ஆட்டோக்களின் பின்புறம் செய்யப்படும் விளம்பரங்கள் வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. பாஜக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினரும் இந்த களப்பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் முன்பே, கட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த முன்பதிவு யுத்தம் தீவிரமடைந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *