அமெரிக்காவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட முதலீடு குறித்து ட்ரம்ப் நெகிழ்ச்சி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 300 பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்காக இந்தியக் கூட்டாளிகளுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இந்த முதலீட்டின் மூலம் அமெரிக்காவின் எரிசக்தி உற்பத்தி அதிகரிப்பதோடு ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரிக்குறைப்பு மற்றும் எளிமையான அரசு நடைமுறைகளே இத்தகைய பெரிய முதலீட்டை ஈர்த்துள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பான மற்றும் தூய்மையான முறையில் இயங்கவுள்ள இந்த சுத்திகரிப்பு நிலையம் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை உலக அளவில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என நம்பப்படுகிறது.