தமிழகம் மற்றும் கேரளாவிற்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடி பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
March 10, 2026

பிரதமர் நரேந்திர மோடி நாளை கேரளா மற்றும் தமிழகத்தில் ரூ.16,450 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். கேரளாவின் எர்ணாகுளத்தில் பிபிசிஎல் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கம் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். ரயில்வே துறையிலும் புதிய மின்மயமாக்கப்பட்ட பாதைகள் மற்றும் புதிய சேவைகளை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தின் திருச்சியில் நடைபெறும் விழாவில் ரூ.5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் அர்ப்பணிக்கிறார். ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் குழாய் வழி எரிவாயு இணைப்பு மற்றும் சென்னையில் புதிய லூப் கலவை ஆலை ஆகியவை இதில் அடங்கும். மேலும், 5 புதிய ரயில்கள் மற்றும் 89 கிராமப்புற சாலைகளையும் அவர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைக்கிறார்.