தெற்கு லெபனானில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் ராணுவம் கடும் எச்சரிக்கை

தெற்கு லெபனானில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் ராணுவம் கடும் எச்சரிக்கை

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக தாக்குதல்களை தீவிரப்படுத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக வெளியேற வேண்டும் என செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் உத்தரவு அப்பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களிடையே பெரும் பதற்றத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானிய மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கவே இஸ்ரேல் தற்போது வலுவான ராணுவ நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கடந்த கால போர்களின் போதும் இது போன்ற வெளியேற்ற உத்தரவுகளை இஸ்ரேல் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *