சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் மஞ்சள் பிள்ளையார் மற்றும் எலுமிச்சை வைத்து சிறப்பு வழிபாடு

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் மஞ்சள் பிள்ளையார் மற்றும் எலுமிச்சை வைத்து சிறப்பு வழிபாடு

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் புதிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. பக்தர் ஒருவரின் கனவில் வந்த உத்தரவின்படி, ஏற்கனவே இருந்த கடல் நீருக்குப் பதிலாக மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு, அருகம்புல் மற்றும் எலுமிச்சம்பழம் ஆகிய பொருட்கள் கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன. இப்பொருட்கள் வைக்கப்பட்டிருப்பது பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பொருட்கள் மங்கலம் மற்றும் புதிய தொடக்கத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. நாட்டில் நிலவும் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதையும், பிணிகள் நீங்கி மக்கள் ஆரோக்கியம் பெறுவார்கள் என்பதையும் இது உணர்த்துகிறது. தீய சக்திகள் அழிந்து சமூகத்தில் அறம் தழைக்கும் என்ற நம்பிக்கையில், இந்த மாற்றத்தை ஒரு நேர்மறையான அறிகுறியாகவே ஆன்மீகவாதிகள் மற்றும் பக்தர்கள் பார்க்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *