வீட்டு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் கூடுதல் வசூல் பின்னணியில் உள்ள அதிரடி உண்மைகள்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை சென்னையில் ₹928.50-ஆக அதிகரித்துள்ளது. இதில் 5 சதவீத ஜிஎஸ்டி மற்றும் விநியோகஸ்தர் கமிஷன் அடங்கும். சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த அச்சத்தால் மக்கள் அதிகளவில் முன்பதிவு செய்வதால், அடுத்த சிலிண்டர் பெற 25 நாட்கள் காத்திருக்க வேண்டிய புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சிலிண்டர் விநியோகத்தின் போது டெலிவரி செய்பவர்கள் கூடுதலாக ₹30 முதல் ₹50 வரை கேட்பதாக புகார்கள் எழுகின்றன. உண்மையில் விநியோகஸ்தர் பெறும் ₹61.84 கமிஷனிலேயே டெலிவரி கட்டணமும் அடங்கியுள்ளது. எனவே, மக்கள் தாமாக முன்வந்து டிப்ஸ் வழங்குவதைத் தவிர, கூடுதல் பணம் தர வேண்டிய கட்டாயம் இல்லை. தட்டுப்பாட்டை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.