சென்னையை காக்க வரும் மூன்றாவது உயிர் கவசம் இதோ உங்களை வியப்பில் ஆழ்த்தும் புதிய காடு

சென்னையை காக்க வரும் மூன்றாவது உயிர் கவசம் இதோ உங்களை வியப்பில் ஆழ்த்தும் புதிய காடு

பள்ளிக்கரணை மற்றும் பழவேற்காடு வரிசையில் சென்னையின் மூன்றாவது சதுப்புநிலக் காடு பக்கிங்காம் கால்வாய் ஓரம் பிரம்மாண்டமாக உருவாகிறது. சுமார் 20 ஹெக்டேர் பரப்பளவில் 20,000 சதுப்புநிலக் கன்றுகளை நடும் பணியை வனத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. இது பெருமழை மற்றும் கடல் சீற்றங்களிலிருந்து சென்னையைப் பாதுகாக்கும் ஒரு இயற்கை அரணாகச் செயல்படும்.

இந்தத் திட்டத்திற்காக ‘பிஷ்போன்’ எனப்படும் மீன் முள் வடிவ கால்வாய்கள் அமைக்கப்பட்டு நீர் ஓட்டம் சீராக்கப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த முயற்சி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதுடன் பல்லுயிர் பெருக்கத்திற்கும் வழிவகுக்கும். சுப்ரியா சாகு ஐஏஎஸ் இந்த முக்கிய தகவலைப் பகிர்ந்து வனத்துறையினரைப் பாராட்டியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *