தமிழக அரசின் அதிரடி திட்டத்தில் இனி வெறும் 10 ஆயிரம் ரூபாயில் கடற்கரை திருமணம் செய்யலாம்

நடுத்தர மக்களின் கடற்கரை திருமண கனவை நனவாக்க தமிழக அரசு மாமல்லபுரத்தில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான முன்பதிவு மற்றும் பராமரிப்பு கட்டணமாக வெறும் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையின் இந்த முன்முயற்சி மூலம் இனி சாதாரண மக்களும் மிகக் குறைந்த செலவில் தங்களது இல்ல திருமணங்களை ரம்மியமான கடற்கரை சூழலில் சிறப்பாக நடத்தி மகிழ முடியும்.
இந்த திட்டத்தில் சைவ உணவிற்கு 700 ரூபாயும் அசைவ உணவிற்கு 1100 ரூபாயும் தொடக்க விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கும் அறைகள் ஒரு நாளைக்கு 5000 ரூபாய் முதல் கிடைக்கின்றன. விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த சேவையை பெறலாம். முதற்கட்டமாக மாமல்லபுரத்தில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் விரைவில் மற்ற கடற்கரை பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.