பிரேசிலில் கொட்டித்தீர்த்த கனமழையால் 14 பேர் உயிரிழப்பு மற்றும் பலத்த சேதம்
February 24, 2026

பிரேசிலின் தென்கிழக்கு நகரமான ஜூயிஸ் டி ஃபோராவில் பெய்த வரலாறு காணாத மழையினால் 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் 440 பேர் வீடுகளை இழந்தனர். பிப்ரவரி மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழையை விட இரண்டு மடங்கு அதிகமாக பெய்துள்ளதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மினாஸ் ஜெரைஸ் மற்றும் ரியோ டி ஜெனிரோ உட்பட 14 மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் பலத்த மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.