இன்ஸ்டாகிராமில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் அதிர்ச்சி தரும் உண்மைகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது மெட்டா
February 24, 2026

13 முதல் 15 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுவர்களில் ஒருவர் இன்ஸ்டாகிராமில் தேவையற்ற ஆபாசப் படங்களைப் பார்ப்பதாக மெட்டா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் தங்கள் பெற்றோரின் டிஜிட்டல் முடிவுகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று மெட்டா ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொடர்ச்சியான சமூக ஊடக பயன்பாடு பதின்ம வயதினரிடையே மன அழுத்தம் மற்றும் போதை பழக்கத்தை உருவாக்குவதாக அறிக்கை கூறுகிறது. சிறார்களின் மனநலத்துடன் விளையாடுவதாகவும் அவர்களை அடிமையாக்குவதாகவும் மெட்டா நிறுவனம் மீது உலகளவில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு சட்ட ரீதியான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.