ஈரான் போர் மேகங்கள் சூழ இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை விடுத்த அதிரடி உத்தரவு
February 23, 2026

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈரானில் தங்கியிருக்கும் இந்திய மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பதற்றம் நிலவும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், அவசர கால உதவிக்கு இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.