பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட் இனி பணம் தானாகவே வங்கிக்கு வரும்

மத்திய அரசு இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் பிஎஃப் கணக்குகளில் உள்ள தொகையை நேரடியாகச் சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கிற்கே அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயிரம் ரூபாய் அல்லது அதற்குக் குறைவான இருப்புத் தொகை கொண்ட கணக்குகளுக்கு இந்த வசதி பொருந்தும். இதற்காகத் தொழிலாளர்கள் எந்தவிதமான விண்ணப்பமோ அல்லது ஆவணங்களோ சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள ஏழு லட்சத்திற்கும் அதிகமான முடங்கிய கணக்குகளுக்கு இந்தத் தானியங்கி ரீஃபண்ட் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த முதற்கட்டத் திட்டம் வெற்றியடைந்தால், எதிர்காலத்தில் சுமார் 25 லட்சம் கணக்குகளுக்கு இந்த வசதி விரிவுபடுத்தப்படும். பிஎஃப் அலுவலகங்களுக்குச் செல்லாமல், எளிய முறையில் பணத்தைப் பெறுவதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் பழைய கணக்குகளில் உள்ள சிறு தொகைகள் இனி வீணாகாமல் தொழிலாளர்களைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.