பாலுடன் கூடிய தேநீருக்குப் பதிலாக பூண்டு டீ குடித்தால் இதயம் பலமாகும்
February 24, 2026

தினமும் காலையில் பால் மற்றும் சர்க்கரை கலந்த தேநீருக்கு மாற்றாக பூண்டு டீ அருந்துவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. பூண்டில் உள்ள அல்லிசின் என்ற வேதிப்பொருள் இயற்கையான ஆன்டிபயாடிக்காகச் செயல்பட்டு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதுடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
இந்த பானம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடல் எடையைக் குறைக்கவும் செரிமானப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் உதவுகிறது. எனினும் இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது நெஞ்செரிச்சலை உண்டாக்கும் என்பதால் கர்ப்பிணிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.