ஒரு குரங்கின் இறப்பிற்காக ஊரே மொட்டை அடித்துக்கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்

ஒரு குரங்கின் இறப்பிற்காக ஊரே மொட்டை அடித்துக்கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்

செய்தி பிரிவு : மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் உள்ள பல்தே கிராமத்தில் ஒரு குரங்கின் மரணம் அந்த ஊர் மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு தெரு நாய் கடித்ததில் காயமடைந்து அந்த குரங்கு உயிரிழந்தது, சாதாரண விலங்கின் இறப்பாக பார்க்கப்படாமல் ஒரு குடும்ப உறுப்பினரின் இழப்பாகவே அங்குள்ளவர்களால் உணரப்படுகிறது. இது போன்ற மனிதாபிமான செயல்கள் சமூகத்தில் விலங்குகள் மீதான அன்பையும் மதிப்பையும் மேம்படுத்துகின்றன.

அந்த குரங்கின் ஆன்மா சாந்தியடைய அங்குள்ள அனுமன் கோவிலில் முறைப்படி இறுதி சடங்குகள் மற்றும் தசகிரியா பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் சுமார் 3000 கிராம மக்கள் பங்கேற்றதுடன், அந்த குரங்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் தங்கள் தலைமுடியை மொட்டை அடித்துக்கொண்டனர். ஒரு விலங்கிற்காக ஒரு கிராமமே திரண்டு வந்து காட்டிய இந்த அன்பு, மனித நேயத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *