கணவனை விட்டுக்கொடுக்க ஒன்றரை கோடி ரூபாய் பேரம் பேசி அதிரடி காட்டிய மனைவி

கணவனை விட்டுக்கொடுக்க ஒன்றரை கோடி ரூபாய் பேரம் பேசி அதிரடி காட்டிய மனைவி

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் அரசு ஊழியர் ஒருவர் தனது சக ஊழியரை காதலித்ததால் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டது. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு வந்தபோது அந்த நபரின் மனைவி ஒரு விசித்திரமான நிபந்தனையை விதித்தார். தனது மகள்களின் எதிர்காலத்திற்காக ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு சொகுசு வீடு மற்றும் ரொக்கப் பணத்தை அவர் இழப்பீடாகக் கோரினார்.

யாரும் எதிர்பாராத விதமாக அந்த நபரின் காதலி இந்த நிபந்தனைக்கு உடனடியாகச் சம்மதித்து பணத்தைச் செலுத்த முன்வந்தார். காதலனுக்காக இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட அவர் துணிந்ததைக் கண்டு நீதிமன்றமே வியப்படைந்தது. தற்போது இரு தரப்பினரும் சுமூகமாகப் பிரிய முடிவெடுத்துள்ள இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *